சுமத்ரா தீவு நிலநடுக்கத்தில் குறைந்தது இருவர் பலி; 20 பேர் காயம்

இந்தோனீசியாவின் சுமத்ரா தீவை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 25) காலை உலுக்கிய நிலநடுக்கத்தில் மேற்கு பசாமான் பகுதியில் குறைந்தது இருவர் மாண்டுவிட்டனர்; 20 பேர் காயமடைந்தனர்.

சிங்கப்பூர் நேரப்படி காலை 9.39 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 என்று பதிவானது.

இதனால் சுமார் 100 வீடுகளும் பள்ளி, வங்கி உள்ளிட்ட பல கட்டடங்களும் சேதமடைந்ததாக இந்தோனீசியப் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்தது.

பசாமான், மேற்கு பசாமான் வட்டாரங்களுக்கு மீட்புப் பணியாளர்கள் அனுப்பப்படவுள்ளனர் என்று அது கூறியது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!