கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பில் நிகழ்ந்த மோதலில் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கையின் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் அந்நாட்டின் பிரதமர், அதிபர் இருவரும் பதவி விலகவேண்டும் என்று கூறும் ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பியிருந்த கூடாரங்கள் உள்ளிட்டவற்றுக்கு சேதம் விளைவித்த ஆரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகை வீசி தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர்.
இந்த மோதலைத் தொடர்ந்து கொழும்பில் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டது.
இலங்கையைப் பாதித்துள்ள பொருளியல் நெருக்கடி கடந்த சில வாரங்களாக அரசியல் நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.