உக்ரேனில் உண்மையிலேயே அணுவாயுதப் பேரிடர் ஆபத்து தலைதூக்குவதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அணுசக்தி ஆணையம் அபாயச் சங்கு ஊதியுள்ளது.
ஐரோப்பாவின் ஆகப் பெரிய அணுசக்தி ஆலை உக்ரேனில் அமைந்திருக்கிறது.
அந்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஸப்போரிஷ்சியா அணுசக்தி ஆலையை ரஷ்யப் படைகள் தாக்குவதாக உக்ரேன் புகார் தெரிவித்தது.
ஆனால், அந்தத் தாக்குதலை நடத்தியது உக்ரேன்தான் என்று மாஸ்கோ பதிலடி கொடுத்தது.
அந்தத் தாக்குதல், உக்ரேனில் உண்மையிலேயே அணுவாயுதப் பேரிடரை ஏற்படுத்திவிடக்கூடிய ஆபத்து தலைதூக்குவதையே காட்டுவதாக அனைத்துலக அணுசக்தி முகவை அமைப்பின் தலைமை இயக்குநரான ரஃபேல் குரோசி சனிக்கிழமை (6 ஆகஸ்ட்) அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த அணுசக்தி ஆலையை கடந்த மார்ச் மாதம் ரஷ்யா ஆக்கிரமித்தது.
இருப்பினும் அதை உக்ரேனிய வீரர்களே இன்னமும் இயக்கிவருகின்றனர்.