ஆப்கானிஸ்தான் துணைப்பாட நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்: 19 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் துணைப்பாட நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர். தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை.

துணைப்பாட நிலையத்தில் தேர்வு நடந்துகொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 27 பேர் காயமடைந்ததாக காபூல் காவல் துறை பேச்சாளர் குறிப்பிட்டார். மாண்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்பட்டது. மாண்டோர் எண்ணிக்கை 33 என தலிபான் தரப்பு சொன்னது. மாண்டோரில் பல பெண் மாணவர்களும் அடங்குவர் எனக் கூறப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து பெண்களுக்கான உயர்நிலை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனினும் பெண்கள் தொடர்ந்து தனியார் துணைப்பாட நிலையங்களுக்குச் செல்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!