இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே, முன்னாள் நிதி அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்சேமற்றும் பசில் ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இலங்கையின் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அனுமதியை உயர்நீதிமன்றம் இன்று(அக்டோபர் 7) வழங்கியுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரி, ராஜபக்சே சகோதரர்கள் தொடர்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.