நவம்பர் 15ஆம் தேதி மிக முக்கியமான தகவலை அறிவிக்கப்போகிறேன்: டிரம்ப்

அடுத்த வாரம் திங்கட்கிழமை மிக முக்கியமான தகவலை அறிவிக்கப்போவதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள மார்-அ-லாகோ பகுதியில் தகவலை வெளியிடப்போவதாக அவர் கூறினார்.

அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் உள்ள டேட்டன் நகரில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டபோது குடியரசுக் கட்சியின் திரு டிரம்ப் பேசினார்.

மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் திரு டிரம்ப் போட்டியிடக்கூடும் என்று கூறப்பட்டு வருகிறது. இப்போது அவர் இவ்வாறு கூறியிருப்பது அதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையே, இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றால் அது அமெரிக்காவின் ஜனநாயக முறைக்கு ஆபத்தாக முடியலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். இடைக்காலத் தேர்தல் தொடர்பிலான தமது இறுதி உரையில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த திரு பைடன் அவ்வாறு சொன்னார்.

அமெரிக்காவில் குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே உள்ள ஆழமான அரசியல் ரீதியான வேறுபாடுகளை திரு பைடனின் கருத்துகள் பிரதிபலிப்பதாகச் சொல்லப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!