ஷாங்காய்: ‘கோஇனூ’ சூறாவளி, சீனாவின் தென்பகுதிகளான குவாங்டோங், ஹைனான் தீவு போன்றவற்றை நெருங்குகிறது.
இதனை முன்னிட்டு, கடலில் பேரலைகள் எழக்கூடும் என்றும் பலத்த காற்று வீசுவதுடன் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சூறாவளியால் தென் சீனக் கடலில் ஒன்பது மீட்டர் உயரம் வரை அலைகள் எழக்கூடும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (அக். 7,8) நிலைமை அவ்வாறு இருக்கும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘கோஇனூ’ என்ற சொல்லுக்கு ஜப்பானிய மொழியில் நாய்க்குட்டி என்று பொருள்.
‘கோஇனூ’ சூறாவளி, தற்போது சீனாவின் தெற்குக் கரையோரம் மணிக்கு 5 முதல் 10 கிலோமீட்டர் வேகத்தில் நெருங்குவதாக வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை பின்னேரத்தில் அது வலிவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தைவானில் இச்சூறாவளியால் ஒருவர் மாண்டார்; மேலும் ஏறக்குறைய 400 பேர் காயமடைந்தனர்.