6 சீனர்கள் கடத்தல்: பிலிப்பீன்ஸ் காவல்துறை தேடல்

மணிலா: தலைநகர் பகுதியில் கடத்தப்பட்டுள்ள 6 சீனர்களின் உறைவிடத்தை பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் தேடிவருவதாக காவல்துறை அறிவித்தது.

வளமிக்க மக்கள் வாழும் பகுதியாகக் கருதப்படும் தெற்கு மெட்ரோ மணிலாவில் கடந்த திங்கட்கிழமை (அக்.30) 9 பேர் கடத்தப்பட்டனர். அவர்களில் 6 சீனர்களை இன்னும் காணவில்லை, ஏனைய மூன்று பிலிப்பீன்ஸ் நாட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை மீட்கப் பிணைத் தொகையை கடத்தியவர்கள் கேட்கிறார்களா அல்லது என்ன காரணத்துக்காக அவர்கள் கடத்தப்பட்டார்கள் என்பதை ஆராய்ந்து வருவதாக கடத்தல் தடுப்புப் பிரிவின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் காஸ்மி அப்ரெனிகா தெரிவித்தார். கடத்தப்பட்டோரின் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

மணிலாவின் கலுவான் நகரில் அந்த 3 பிலிப்பீன்ஸ் நாட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். திங்கட்கிழமை விடியற்காலையில் வீட்டை உடைத்து உள்ளே புகுந்த நபர்களால் தாம் கடத்திச்செல்லப்பட்டதாக விடுவிக்கப்பட்ட ஒருவர் சொன்னதாக அந்நகரக் காவல்துறை தலைவர் பிலிப் அகுயிலர் கூறினார்.

நவீன அடிமைத்தனம் எனப்படும் பொய் வேலை வாய்ப்புகளை நம்பி இணைய மோசடியில் பல சீனர்கள் சிக்கிக்கொள்வதை சீனா அடிக்கடி பிலிப்பீன்சிடம் சுட்டியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!