சீனா மருத்துவமனைத் தாக்குதல்: இருவர் மரணம், 21 பேர் காயம்

பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள செங்னான் மருத்துவமனையில் ஆடவர் ஒருவர் கத்தியைப் பயன்படுத்தி அங்கிருந்த பலரைத் தாக்கினார்.

இதில் இருவர் மாண்டனர், 21 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் மே 7ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

சந்தேக நபர் மருத்துவமனைக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயம் அடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் தொடர்பான படம் சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான தி பேப்பர் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது. அதில் கம்பு ஒன்றை ஏந்திக்கொண்டிருந்தவரை நோக்கி சந்தேக நபர் கத்தியை நீட்டியபடியிருப்பதைப் பார்க்க முடிந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!