பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள செங்னான் மருத்துவமனையில் ஆடவர் ஒருவர் கத்தியைப் பயன்படுத்தி அங்கிருந்த பலரைத் தாக்கினார்.
இதில் இருவர் மாண்டனர், 21 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் மே 7ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
சந்தேக நபர் மருத்துவமனைக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயம் அடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் தொடர்பான படம் சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான தி பேப்பர் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது. அதில் கம்பு ஒன்றை ஏந்திக்கொண்டிருந்தவரை நோக்கி சந்தேக நபர் கத்தியை நீட்டியபடியிருப்பதைப் பார்க்க முடிந்தது.