அமெரிக்க விமானிக்கு சிங்கப்பூரில் நான்கு வார சிறை தண்டனை
தங்கும் இடத்திலேயே இருப்பதற்கான உத்தரவை மீறிய அமெரிக்க விமானி ஒருவருக்கு இன்று (மே 13) சிங்கப்பூரில் நான்கு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பிரையன் டுகன் யர்கன் எனும் அந்த 44 வயது விமானி கடந்த மாதம் 3ஆம் தேதி ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் வந்தார். அவருக்கு 30 நாட்கள் குறுகியகால வருகை அனுமதி அளிக்கப்பட்டது.
யர்கனுக்கு தங்கும் இடத்திலேயே இருப்பதற்கான உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது என்றும் ஏப்ரல் 17ஆம் தேதி வரை அவர் தங்கும் இடத்தைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் முன்னதாக குறிப்பிட்டிருந்தது.
ஆனால், கடந்த மாதம் 5ஆம் தேதி காலை 11.15 மணியளவில் கிரௌன் பிளாசா சாங்கி விமான நிலைய ஹோட்டல் அறையைவிட்டு வெளியேறினார். குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணைய ஊழியர் உட்பட அதிகாரிகள் சிலர், ஹோட்டல் அறையில் நடத்திய சோதனையில் யர்கன் அங்கு இல்லாதது அவர்களுக்கு தெரியவந்தது.
சாங்கி விமான நிலைய எம்ஆர்டி நிலையத்திற்கு நடந்துசென்ற யர்கன், அங்கு ரயிலில் ஏறி சிட்டி ஹால் நிலையத்தில் இறங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து சைனாடவுன் பாயிண்ட் கடைத்தொகுதிக்கு நடந்து சென்றார். அங்குள்ள நான்கு கடைகளில் உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் கருவியையும் முகக்கவசங்களையும் யர்கன் வாங்கினார். டாக்சியில் ஏறி பிற்பகல் 2.15 மணிக்கு யர்கன் ஹோட்டலைச் சென்றடைந்தார்.
முழுமையான செய்தியைப் படிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online