மலேசியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கிருமித்தொற்று பாதிப்பு

படம்: இபிஏ

மலேசியாவில் கிருமித்தொற்று சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், கடினமாக இருந்தாலும் மலேசிய மக்கள் நடமாட்ட கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (மே 20) அங்கு 6,806 பேர் தொற்றுக்கு ஆளானதாக சுகாதார அமைச்சு டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. 46 பேர் மாண்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக 6,000த்திற்கும் மேற்பட்ட கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின.

திடுக்கிடும் அளவில் அதிகரித்துள்ள கிருமித்தொற்று சம்பவங்கள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த கடினமான காலகட்டத்தை மக்கள் கடந்து வருவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் டாக்டர் மகாதீர் கூறினார்.

கொவிட்-19 கிருமிப் பரவல் சங்கிலியை உடைக்க மலேசியர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும், வருமானம் இல்லாதவர்களுக்கு உணவு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சொன்னார்.

“நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீண்டும் அறிமுகப்படுத்துவது சரியானது, ஆனால் அதை உடனடியாக செயல்படுத்துவதில் நாம் தயக்கம் காட்டுகிறோம்,” என்று இன்று (மே 20) அவர் வெளியிட்ட வலைப்பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

தடுப்பூசி போடுவது விரைவுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

கிருமித்தொற்று
மலேசியா
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!