தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை கொவிட்-19 தொற்றினால் நேரடியாக சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களில் அனுமதிக்கப்படுவர்
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டு அவர்களுக்கு அறிகுறி இல்லை என்றாலோ இலேசான அறிகுறிகளே தென்பட்டாலோ, மருத்துவமனைகளுக்குப் பதிலாக சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களில் அவர்கள் நேரடியாக அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
மேலும், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு ஆளானால், 21 நாள்களுக்குப் பதிலாக 14 நாள்களில் அவர்கள் வீடு திரும்பிவிடுவதாக அவர் கூறினார். அதன் பின்னர் ஏழு நாள்களுக்கு அவர்கள் கட்டாய விடுப்பில் வைக்கப்படுவர்.
அவர்களுக்கு ‘கொவிட்-19 தொற்று இல்லை’ என்று பரிசோதனை முடிவுகள் காட்டினாலோ அவர்களிடம் கிருமித்தொற்றுப் பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தாலோ இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும்.
அத்தகையோர் இன்னும் முன்கூட்டியே வீடு திரும்ப முடியுமா என்பது பற்றி மேலும் மறுஆய்வு செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 26) அவர் சொன்னார்.