உள்ளூரில் புதிதாக 48 பேருக்கு கிருமித்தொற்று

சின் சுவீ சாலையில் உள்ள ஃமை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பாலர் பள்ளியில் நேற்றைய (ஆகஸ்ட் 15) நிலவரப்படி கொவிட்-19 தொற்றுக் குழுமம் 31 பேராக உயர்ந்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உள்ளூரில் இன்று (ஆகஸ்ட் 16) நண்பகல் நிலவரப்படி புதிதாக 48 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 32 பேர், முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டனர்.

முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடைய மற்ற ஏழு பேருக்கு கண்காணிப்புப் பரிசோதனை மூலம் தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எஞ்சிய ஒன்பது பேருக்கு எப்படி கிருமி தொற்றியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஐந்து பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் வந்திறங்கியபோது அந்த ஐவருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 66,225ஆக உள்ளது.

இதற்கிடையே, சின் சுவீ சாலையில் உள்ள ஃமை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பாலர் பள்ளியில் நேற்றைய (ஆகஸ்ட் 15) நிலவரப்படி கொவிட்-19 தொற்றுக் குழுமம் 31 பேராக உயர்ந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை அத்தொற்றுக் குழுமம் முதன்முறையாக அடையாளம் காணப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!