கொவிட்-19 தொற்றால் 10 பேர் உயிரிழப்பு; புதிதாக 2,263 பேருக்குத் தொற்று
கொவிட்-19 தொற்றால் 73க்கும் 93 வயதுக்கும் இடைப்பட்ட மூத்தோர் 10 பேர் உயிரிழந்துவிட்டதாக சுகாதார அமைச்சு நேற்று திங்கட்கிழமை (அக்டோபர் 11) இரவு தெரிவித்தது.
அவர்களில் நால்வர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை, மற்ற மூவர் ஒருமுறை மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இநில்லையில், திங்கட்கிழமை நண்பகல் நிலவரப்படி, புதிதாக 2,263 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. அவர்களில் சமூக அளவில் 1,949 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 306 பேரும் அடங்குவர். வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்களில் எண்மருக்கும் தொற்று உறுதியானது.
கடந்த வாரயிறுதியில் அவர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது மருந்தகங்களில் பொதுவாக குறைவான பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
மருத்துவமனைகளில் 1,698 பேர் உள்ளனர். அவர்களில் 308 பேருக்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. 42 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.