பல உடலுறுப்புகளுக்குப் பரவி நெடுநாள் தங்கும் தன்மை கொண்ட கொரோனா கிருமி
கொரோனா கிருமி சில நாள்களில் சுவாசக்குழாயிலிருந்து இதயத்துக்கும் மூளைக்கும் உடலின் கிட்டத்தட்ட மற்ற எல்லா உறுப்புகளுக்கும் பரவும் ஆற்றல் கொண்டது.
அது மட்டுமல்ல, உடல் உறுப்புகளைத் தாக்கும் அந்தக் கிருமி, அங்கு பல மாதங்கள் நீடித்திருக்கும் ஆற்றல் பெற்றது என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
அமெரிக்காவின் தேசிய சுகாதார நிலையம் அந்த ஆய்வை நடத்தியது.
கொரோனா கிருமி உடலிலும் மூளையிலும் எங்கெங்கு பரவுகிறது, அது எவ்வளவு நாள்கள் அங்கு நீடிக்கிறது என்பது பற்றிய ஆக விரிவான ஆய்வு இது என்று ஆய்வாளர்கள் கூறினர்.
சுவாசக்குழாய் தவிர்த்த மற்ற உடல் உறுப்புகளில் உள்ள அணுக்களில் தன்னைப் பெருக்கிக் கொள்ளும் ஆற்றல் கொரோனா கிருமிக்கு உள்ளதாக ஆய்வு கண்டறிந்தது.
அந்தக் கிருமியை உடலிலிருந்து அகற்றுவது மெதுவடையும்போது, உடலின் நோய் அறிகுறிகள் நீடிக்கின்றன. இத்தகையோரே கொவிட்-19 நோயால் நீண்டநாள் பாதிக்கப்படுவோராகக் கருதப்படுகின்றனர்.
இந்தத் தகவல்கள் கிருமி தொற்றியோருக்கான பராமரிப்பை மேம்படுத்த உதவும் என்று மிசோரியில் உள் செய்ண்ட் லூயிஸ் சுகாதாரப் பராமரிப்புத் துறைத் தலைவர் ஸியாட் அல்-அலி கூறினார்.
"கொவிட்-19 கிருமியால் நீண்ட நாள் அவதிப்படுவோரின் பல்வேறு உடல் உறுப்புகள் ஏற் பாதிக்கப்படுகின்றன என்பதிலும் எப்படி நோய் அறிகுறி இல்லாதவர்களுக்கும் நீண்ட நாள் பாதிப்பு ஏற்படுகிறது என்பதிலும் பல குழப்பங்கள் இருந்தன. அவற்றுக்குத் தெளிவு கிடைத்துள்ளது," என்றும் அவர் தெரிவித்தார்.