புதிதாக 675 பேருக்கு ஓமிக்ரான் தொற்று
சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) நண்பகல் நிலவரப்படி, புதிதாக 863 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. உள்ளூர் அளவில் 500 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 363 பேருக்கும் தொற்று உறுதியானது.
சிங்கப்பூரில் கொவிட்-19 நிலவரம் குறித்து சுகாதார அமைச்சு அதன் இணையப் பக்கத்தில் அன்றாடம் வெளியிட்டு வரும் தகவலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக 675 பேருக்கு ஓமிக்ரான் வகை கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. உள்ளூரில் 422 பேரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 253 பேரும் தொற்றுக்கு ஆளாகினர்.
வாராந்திர தொற்று விகிதம் ஞாயிற்றுக்கிழமை 1.49ஆக சற்று கூடியது. சனிக்கிழமை இந்த விகிதம் 1.47ஆக இருந்தது.
கொவிட்-19 தொற்றால் புதிதாக மரணம் எதுவும் பதிவாகவில்லை. இதுவரை தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 843ஆக உள்ளது.
மருத்துவமனைகளில் 196 பேர் கொவிட்-19 தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் எண்மருக்கு செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 13 பேர் உள்ளனர்.