புதிதாக 675 பேருக்கு ஓமிக்ரான் தொற்று

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) நண்பகல் நிலவரப்படி, புதிதாக 863 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. உள்ளூர் அளவில் 500 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 363 பேருக்கும் தொற்று உறுதியானது.

சிங்கப்பூரில் கொவிட்-19 நிலவரம் குறித்து சுகாதார அமைச்சு அதன் இணையப் பக்கத்தில் அன்றாடம் வெளியிட்டு வரும் தகவலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக 675 பேருக்கு ஓமிக்ரான் வகை கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. உள்ளூரில் 422 பேரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 253 பேரும் தொற்றுக்கு ஆளாகினர்.

வாராந்திர தொற்று விகிதம் ஞாயிற்றுக்கிழமை 1.49ஆக சற்று கூடியது. சனிக்கிழமை இந்த விகிதம் 1.47ஆக இருந்தது.

கொவிட்-19 தொற்றால் புதிதாக மரணம் எதுவும் பதிவாகவில்லை. இதுவரை தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 843ஆக உள்ளது.

மருத்துவமனைகளில் 196 பேர் கொவிட்-19 தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் எண்மருக்கு செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 13 பேர் உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!