விசா எடுத்து வெளிநாடு சென்று பிச்சை எடுத்த இருவருக்குச் சிறைத்தண்டனை

துபாய்: பிச்சை எடுத்ததற்காக ஆசிய நாட்டைச் சேர்ந்த இருவருக்கு துபாயில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆணும் பெண்ணும் பிச்சை கேட்டு மெட்ரோ ரயில் பயணிகளைத் தொந்தரவு செய்ததாகக் கூறப்பட்டது.

அவர்கள் இருவரும் துபாயில் ஒரு மாதகாலத்தைச் சிறையில் கழிக்க வேண்டும். தண்டனை முடிந்ததும் அவர்கள் சொந்த நாட்டிற்குத் திருப்பியனுப்பப்படுவர்.

சுற்றுக்காவல் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அந்த ஆணையும் பெண்ணையும் கண்டதாகக் காவல்துறை ஆவணங்கள் தெரிவித்தன. அதிகாரிகள் அவர்களை நிறுத்தி விசாரித்தபோது, அவ்விருவரும் சுற்றுப்பயணிகள் எனத் தெரியவந்தது.

துபாயில் இருக்கும் ஒருவரின் துணையுடன் விசா பெற்று, அவர்கள் அந்நகருக்குச் சென்றனர். அங்கிருக்கும்போது பிச்சை எடுத்துப் பணம் சேர்க்க அவர்கள் முடிவுசெய்தனர்.

தேவையான பணம் சேர்ந்ததும் தாய்நாட்டிற்குத் திரும்பி சொந்தமாகத் தொழில் தொடங்க அவர்கள் திட்டமிட்டிருந்ததாக ‘கலீஜ் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த ஆணும் பெண்ணும் முறையே 191 திர்ஹம், 161 திர்ஹம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறுகிய காலத்தில் அவர்கள் அப்பணத்தைச் சேர்த்ததாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!