மாணவியருக்கு ஆறு மாத மகப்பேற்று விடுப்பு

திருவனந்தபுரம்: உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவியர் மாதவிடாய் நாள்களில் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் வகையில் இந்தியாவின் கேரள மாநில அரசு அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

அதற்கேதுவாக, உயர்கல்வி நிலைய மாணவியருக்குத் தேவையான வருகைப்பதிவை 75 விழுக்காட்டில் இருந்து 73 விழுக்காட்டிற்குக் குறைத்து, அது அறிவித்தது.

இந்நிலையில், 18 வயதிற்கு மேற்பட்ட மாணவியர் கருத்தரிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு ஆறு மாதங்கள் வரையிலும் மகப்பேற்று விடுப்பு அளிக்கப்படும் என்று கேரளப் பல்கலைக்கழகம் நேற்று திங்கட்கிழமை (06-03-2023) அறிவித்தது.

அப்படி மகப்பேற்று விடுப்பில் செல்லும் மாணவியர், அதன்பின் நேரடியாக வகுப்புகளில் பங்கேற்க அனுமதிப்பது என்று பல்கலைக்கழக ஆட்சிக்குழு முடிவுசெய்துள்ளது.

மகப்பேற்று விடுப்பில் சென்ற மாணவியரின் மருத்துவ ஆவணங்களைச் சரிபார்ப்பதும் பல்கலைக்கழகத்தின் அனுமதி பெறாமல் அவர்களைக் கல்லூரியில் மீண்டும் சேர்த்துக்கொள்வதும் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களின் பொறுப்பு என்று ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது.

அப்பல்கலைக்கழகம் ஏற்கெனவே மாணவியருக்குத் தேவையான வருகைப்பதிவை 75 விழுக்காட்டில் இருந்து 73 விழுக்காடாகக் குறைத்துவிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!