கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வெளிநாட்டு ஊழியர்களின் விண்ணப்பங்கள் ஏற்பு

கட்டுமானம், தோட்டத்தொழில், உற்பத்தி, வேளாண்மை, சேவைகள் ஆகிய ஐந்து முக்கியத் துறைகளில் பணியாற்ற 995,396 வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலை அனுமதிச்சீட்டு வழங்க மலேசிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த எண்ணிக்கை தொழில்துறைகளின் வெளிநாட்டு ஊழியர் தேவையைப் பூர்த்திசெய்யும் என எதிர்பார்ப்பதாக மலேசிய மனிதவள அமைச்சர் வி.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

ஆகையால், வெளிநாட்டு ஊழியர் வேலைவாய்ப்பு விதித்தளர்வுத் திட்டத்தின்கீழ் இனிமேல் வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்களை ஏற்பதையும் ஒப்புதல் அளிப்பதையும் மறுஅறிவிப்பு வெளியாகும்வரை ஒத்திப்போட மலேசிய அரசாங்கம் முடிவுசெய்துள்ளது என்று அமைச்சர் சிவகுமார் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க அனுமதி பெற்றுள்ள நிறுவனங்கள் விரைந்து அதனைச் செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!