முன்மாதிரி பணியாளர் விருதை வென்ற மலேசிய தமிழர்

மலேசியாவில் 2023ஆம் ஆண்டுக்கான முன்மாதிரி ஊழியர் விருது மருத்துவர் மலர் சாந்திக்கு வழங்கப்பட்டுள்ளது. 

மலேசிய மக்களுக்கு சுகாதாரக் குறிப்புகளை தொடர்ந்து வழங்க இந்த விருது பெரிய ஊக்கம் தந்துள்ளதாக மலர் சாந்தி மலேசிய ஊடகங்களிடம் கூறியுள்ளார். 

கொலம்பியா ஆசியா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவராக உள்ள மலர், சமூக ஊடகங்கள் வழி  மிக எளிமையான முறையில் மருத்துவக் குறிப்புகளை வழங்கிவருகிறார். 

மக்கள் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் மருத்துவமனைகளை நாடும் போக்கு குறையும் என்கிறார் அவர். 

முன்மாதிரி ஊழியர் விருதை மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிமிடம் மலர் பெற்றார். 

தமக்கு விருது கொடுத்த அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த மலர், தமது பெற்றோர், கணவர் மற்றும் இரண்டு மேலாளர்கள் உதவியின்றி இது நட ந்திருக்காது என்றும் குறிப்பிட்டார். 

கொவிட்-19 தொடர்பான தகவல்களையும் தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வையும் காணொளி வாயிலாக சமூக ஊடகங்களில் அவர் பரப்பினார். 

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!