தைப்பூசத் திருநாள் மலேசியாவைச் சேர்ந்த லிடாவதி ஸக்காரியாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது.
பத்துமலைக் கோவிலுக்கு வெளியே, முன்பின் தெரியாத வழிப்போக்கர்களின் உதவியுடன் தமது முதல் குழந்தையை ஈன்று எடுத்தார் 39 வயது லிடாவதி.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) அன்று, நிறைமாத கர்ப்பிணியான லிடாவதிக்கு இடுப்பு வலி எடுத்தது.
கணவர் இஸ்மாயிடி அவரை தமது காரில் அவசர அவசரமாக அழைத்துச் சென்றார்.
ஆனால் தைப்பூச நாளான அன்று, எல்லா சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல்.
ஒரு கட்டத்தில் பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்துக்கு வெளியே கார்கள் நகரவில்லை.
கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்த மரீ புஷ்பமும் அவரது மகள் நரோஷினி அன்னசெல்வமும் லாரியில் லிடாவதி வலியில் துடித்துக்கொண்டிருந்ததை கவனித்தனர்.
லாரியின் கதவுக் கண்ணாடியைத் தட்டி என்ன ஆயிற்று என்று கேட்ட அவர்களிடம் விவரத்தைச் சொன்னார் லிடாவதி.
லிடாவதியைக் கதவைத் திறக்கச் சொன்னார்கள் தாயும் மகளும்.
அவர்களின் இறை தரிசனத்துக்கு இடையூறு வரவேண்டாம் என்று லிடாவதி மறுத்தபோதும் அவர்கள் கேட்கவில்லை.
பட்டுவேட்டி, தங்கள் ஆடைகள் என உட்பட கையில் கிடைத்த துணிகள் எல்லாவற்றையும் வைத்து திருவாட்டி மரீ புஷ்பமும் நரோஷினியும் லிடாவதிக்கு உதவினர்.
அருகில் உள்ள வேறு சில பக்தர்கள் கைப்பூசத்துக்கு உகந்த மஞ்சள் வேட்டியை விரித்து, கொளுத்தும் வெயிலிலிருந்து அவர்களைப் பாதுகாத்தனர்.
இரு பெண்கள் மேல் எல்லாம் ரத்தம்.
"அந்த நேரம் நாங்கள் வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. பிள்ளை பிறந்தவுடன் அவர்கள் அவ்வளவு ஆனந்தம் அடைந்தார்கள். எனக்கோ பேச்சு வரவில்லை," என்று ஃப்ரீமலேசியாடுடே இணையத்தளத்திடம் நெகிழ்ச்சியுடன் கூறினார் லிடாவதி.
அவர்கள் கொடுத்து உதவிய பட்டுத் துண்டை அவர்களின் பேருதவியின் நினைவாக லிடாவதி பத்திரப் படுத்தியுள்ளார்.
தங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகூறி அவர்களின் தன்னலமற்ற செயலைப் பாராட்டினார் னார் கணவவர் இஸ்மாயிடி.
தங்களது முதல் குழந்தை நலமாகப் பிறந்ததில் தம்பதியினருக்குப் பூரிப்பு.
மகள் பிறந்த நாள் உண்மையில் இவர்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத திருநாள்தான்.