தாயைக் கொன்று துண்டுதுண்டாக வெட்டிய மகன் 

மலேசியாவில் 15 மனித உடல் துண்டுகள் கழிவுநீர்த் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டன. இதன் தொடர்பில் 42 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சொத்து தகராறு குறித்து தன்னுடைய தாயை சந்தேக நபர் கொன்று துண்டுதுண்டாக வெட்டியதாகக் காவல் துறை தெரிவித்தது.

மலேசியாவின் பெராக் மாநிலத்தில் இந்தச் கோரச் சம்பவம் நடந்தது.

நேற்று மாலை சம்பவம் குறித்து காவல் துறைக்கு அழைப்பு கிடைத்தது. சோதனை நடத்தியபோது, உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பிரேத பரிசோதனையில் உடல் பாகங்கள் ஒரு 68 வயது மாதுடையது என்று தெரியவந்தது.

இதனையடுத்து, மாதுவின் மகன் கைதுசெய்யப்பட்டார். ஓர் அரிவாள், இரண்டு கத்திகள், கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட மற்ற பொருள்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

தன்னுடைய தந்தை தமக்கு விட்டுச்சென்ற சொத்து குறித்து சந்தேக நபருக்குத் திருப்தி இல்லாததால், அவர் தன்னுடைய தாயைக் கொன்றதாக அதிகாரிகள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!