அனுஷா செல்வமணி

பொங்கோலில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி ஒன்றில் திரு லெட்சுமணன் முரளிதரன், 49, மிக பரிச்சயமான முகம். சக வெளிநாட்டு ஊழியர்களுக்கு எந்தப் பிரச்சினை எழுந்தாலும் அதைத் தீர்க்க கூடியவர் இவர்.
மரின் பரேட் குடியிருப்பில் வசிக்கும் சிறுவர்கள், குடும்பத்தில் ஏற்படும் நிதி நெருக்கடிச் சூழலால் பாலர் பள்ளிக் கல்வியை மேற்கொள்ள முடியாமல் போவதை முறியடிக்க, அவர்களின் குடும்பங்களுக்குக் கைகொடுக்கும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று மரின் பரேட் தொகுதிக்கு உட்பட்ட ஜூ சியாட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் பயிலும் இளம் சிங்கப்பூர் விளையாட்டு வீரர்கள் தங்களின் கல்விச் செலவுகளுக்குக் கைகொடுக்கும் வகையில் புதிய உபகாரச் சம்பளத் திட்டத்திற்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஏப்ரல் 26ஆம் தேதி தெரிவித்தார்.
தமிழ்மொழி விழாவை முன்னிட்டு சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை ‘இன்பத்தமிழும் ஆற்றல்மிகு இளைய தலைமுறையும்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
தமிழ்மொழி விழாவை ஒட்டி தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கியட் ஹொங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு, 11வது முறையாகச் சிறப்புப் பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு ஏப்ரல் 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஏற்பாடு செய்திருந்தது.
ஸ்ரீ நாராயண மிஷன், 270 படுக்கைகள் கொண்ட அதன் மூன்றாவது தாதிமை இல்லத்தை ஏற்று நடத்த சுகாதார அமைச்சு ஒப்பந்தப்புள்ளி வழங்கியுள்ளது.
கல்வித்துறையில் ஆசிரியர்களைத் தக்கவைத்துக்கொள்ள சம்பளம், வேலைச் சூழல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பை முதலில் வழங்குவது மிக முக்கியமான ஒன்று என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
போதைப்பழக்கத்திற்கு அடிமையாவோரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 30 வயதுக்கும் கீழ் இருக்கும் பெண்கள் என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அண்மையில் தெரிவித்தது.
தமிழும் இசையும், கவிஞர்களும் கானமும் என்ற பெயரில் லிஷா எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் சித்திரைப் புத்தாண்டு அன்று ஒரு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சித்திரை மாதத்தின் முதல் நாளான ஏப்ரல் 14ஆம் தேதியன்று தமிழர்களால் உலகமெங்கும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தின் தொடக்கம் இந்தாண்டு ஞாயிற்றுக்கிழமை அமைந்ததால் லிட்டில் இந்தியாவில் வழக்கத்துக்கு மாறாக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.