நயன்தாராவின் பெயரில் சிங்கப்பூர் கோயிலில் அர்ச்சனை செய்த ரசிகர்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நயன்தாராவின் பிறந்தநாளன்று சிங்கப்பூரைச் சேர்ந்த அவரது தீவிர ரசிகர் ஒருவர் அவரது பெயரில் கோயிலில் அர்ச்சனை செய்து அந்த அர்ச்சனைச் சீட்டை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஈசூனில் உள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் வாங்கப்பட்ட அந்த அர்ச்சனைச் சீட்டில் நயன்தாராகுரியன், திருவோண நட்சத்திரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ரசிகரின் பதிவுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தனது 35வது பிறந்தநாளை கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 18) தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்காவில் சிறப்பாகக் கொண்டாடினார்.

அமெரிக்காவில் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அவையும் ரசிகர்களால் பெரிதும் பகிரப்படுகின்றன.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!