வூஹான் கிருமித்தொற்று எதிரொலியாக, உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளைப் பயன்படுத்தும் பயணிகள் அனைவரது உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்படுகிறது.
இன்று (ஜனவரி 24) நண்பகலில் இந்த நடவடிக்கை தொடங்கியது.
சீனப் புத்தாண்டு விடுமுறை என்பதால் அதிகமான பயணிகள் அவ்விரு சோதனைச் சாவடிகள் வழியாக மலேசியா செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்விரு சோதனைச்சாவடிகள் வழியாகச் செல்லும் பயணிகள் அனைவரின் உடல் வெப்ப நிலையும் சுகாதாரப் பராமரிப்பு உதவியாளர்களால் பரிசோதிக்கப்படும் என்றும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்படின் சம்பந்தப்பட்டவர்கள் கூடுதல் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவர் என்றும் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல, படகு, சொகுசுக் கப்பல் முனையங்கள், பிஎஸ்ஏ முனையங்கள், ஜூரோங் துறைமுகம் உள்ளிட்ட கடல்வழி சோதனைச் சாவடிகளிலும் பயணிகளின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படும் என்று கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.
#தமிழ்முரசு #வூஹான் #சிங்கப்பூர் #மலேசியா #உட்லண்ட்ஸ்சோதனைச்சாவடி #துவாஸ்சோதனைச்சாவடி