காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதியன்று இரண்டு ஆடவர்கள் சுகாதார பராமரிப்பு ஊழியர்களுக்கு 100 ரோஜாக்களை வழங்கினர்.
மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்கும் மட்டுமில்லாமல் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் பணியாற்றும் இதர ஊழியர்களுக்கும் ரோஜாக்களை இவ்விருவரும் வழங்கினர்.
அந்த ரோஜாக்களை வழங்கியவர்களில் ஒருவர் இசைக் கலைஞரான திரு ஜீ யோன்.
அவரின் சொந்த ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த நிகழ்வை ஒட்டிய காணொளி ஒன்றை இம்மாதம் 15ஆம் தேதி பதிவு செய்தார்.
“நாள்தோறும் சேவையாற்றும் முன்னிலை ஊழியர்கள் இல்லாவிட்டால் நாம் நோய்வாய்படும்போது நம்மை பார்த்துக்கொள்ள யாரும் இருக்கமாட்டார்கள். அவர்களை மரியாதையோடும் அன்போடும் அரவணைப்போம்,” என்றார் திரு ஜீ யோன்.
செய்தி, படங்கள்: ஸ்டாம்ப்