புத்தாண்டு பிறந்த அதே கணத்தில் சிங்கப்பூரில் 3 குழந்தைகள் பிறந்திருக்கின்றனர்.
ராபிள்ஸ் மருத்துவமனை, மவுன்ட் அல்வேர்னியா மருத்துவமனை, மவுன்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனை ஆகியவற்றில் அம்மூவரும் பிறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ராபிள்ஸ் மருத்துவமனையில் ஆட்ரே ஜியோ, 31, ஸெமின் டான், 32 தம்பதிக்கு ஆவெரி டான் எனும் பெண் குழந்தை பிறந்தது. தங்களது முதல் குழந்தையே புத்தாண்டின் முதல் மணித்துளியில் பிறந்ததில் பலமடங்கு மகிழ்ச்சி என்றார் திரு டான்.
திரு டேவிட் சான், 36, திருவாட்டி யு ஹுய் லான், 32 தம்பதிக்கு மவுன்ட் அல்வேர்னியா மருத்துவமனையில் புத்தாண்டுடனே மகள் பிறந்தாள். அந்தத் தம்பதிக்கு இரு இரண்டாவது குழந்தை. அவர்களுக்கு 2 வயதில் மகன் இருக்கிறார்.
சிங்கப்பூரில் புத்தாண்டின் மூன்றாவது முதல் குழந்தை மவுன்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை.
கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனையில் இவ்வாண்டின் முதல் முதல் ஆண் குழந்தை அதிகாலை 12.10க்கு பிறந்தது.
அந்த மருத்துவமனையில் புத்தாண்டு பிறாந்து சற்று நேரத்தில் பிறந்த 3 குழந்தைகளையும் அவர்களது பெற்றோரையும் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா பார்த்து நலம் விசாரித்ததுடன், அந்த மருத்துவமனையில் இருக்கும் சிங்கப்பூரின் ஒரே பால் வங்கியையும் பார்வையிட்டார்.