மற்றவர்களுடன் பழக விரும்பாமல் தனிமையைத் தாங்களாகவே நாடும் இளையர்களுக்கெனத் தொடங்கப்பட்ட ஆதரவுத் திட்டம் நம்பிக்கை அளிக்கும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
‘ஃபெய் யுவெ’ சமூக சேவை அமைப்பு 2021ஆம் ஆண்டு இந்த முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியது.
பராமரிப்பாளர்கள், பள்ளிகள், சமூக சேவை நிபுணர்கள் ஆகியோர் பரிந்துரை செய்திருந்த 12 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட 25 இளையர்கள், இத்திட்டத்தின்கீழ் இணைந்தனர்.
‘ரீச்’ எனப்படும் மனநலச் சுகாதாரப் பராமரிப்புச் சேவைக் குழுவின் பங்காளித்துவத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டம், பள்ளி அல்லது வேலையில் மீண்டும் இளையர்களை ஒருங்கிணைப்பதையும் அவர்களின் குடும்பத்தாரை அவர்கள் ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
திட்டத்தில் சேர்ந்து ஓராண்டு காலம் ஆன பிறகு, இளையர்களில் 83 விழுக்காட்டினரிடம் முன்னேற்றம் தெரிந்தது. அவர்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியே அடியெடுத்து வைத்தனர் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்தனர்.
கல்விசார்ந்த பின்னடைவுகள், மற்றவர்களால் வதைக்கப்படுதல், மனநலம் தொடர்பான சவால்கள் என இளையர்கள் பல காரணங்களுக்காக தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என்றனர் சமூக சேவையாளர்கள்.
முன்னோடித் திட்டம் பலனித்துள்ளதை அடுத்து ஃபெய் யுவெ தொடர்ந்து தற்போது 51 இளையர்களுடன் இத்திட்டத்தின் மூலம் பணியாற்றி வருகிறது.