தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிங்கப்பூர் எஃப்1 கார் பந்தயம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நடப்பிலுள்ள குடிநுழைவுக் கட்டுப்பாடுகள் காரணமாக இவ்வாண்டும் உலகின் ஒரே இரவு நேர எஃப்1 கார் பந்தயமான சிங்கப்பூர் கிராண்ட் பிரீயை நடத்த வாய்ப்பில்லை என்பதை எஃப்1 அமைப்பினரும் சிங்கப்பூரும் அதிகாரிகளும் ஒத்துக்கொண்டனர்.
இதையடுத்து, துருக்கி, சீனாஅல்லது அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் பந்தயத்தை நடத்தும் வகையில் மாற்று ஏற்பாடுகளை எஃப்1 அமைப்பு பரிசீலித்து வருகிறது.
கொரோனா தொற்றால் இவ்வாண்டில் வேறு சில எஃப் பந்தயங்களும் ரத்தாகலாம் எனச் சொல்லப்படுகிறது.