இரட்டையரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட கால்வாயில் விசாரணை அதிகாரிகள்

அப்பர் புக்கிட் தீமா பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் 11 வயது இரட்டையரின் சடலங்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை (ஜனவரி 21) கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணை அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 25) அந்தக் கால்வாய் உள்ள பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.

இந்நிலையில், கிரீன்ரிட்ஜ் கிரசெண்ட்டில் உள்ள விளையாட்டு இடம் ஒன்றுக்கு அருகே உள்ள அந்தக் கால்வாய்க்கு இன்று பிற்பகல் 2.15 மணியளவில் விசாரணை அதிகாரிகள் வந்தனர்.

சாதாரண உடை அணிந்திருந்த அவர்கள், அந்தப் பகுதியைச் சுற்றிப் பார்வையிட்டனர். அந்தக் கால்வாய்க்குள் இறங்குவதற்கான பாதையைக் கண்டறியும் பணியில் அவர்கள் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

தாளில் குறிப்பு எடுத்துக்கொண்டிருந்த அந்த அதிகாரிகளில் ஒருவர், பின்னர் கால்வாய்க்குள் இறங்கினார். கால்வாய் வழியாக உள்ள தடுப்புவேலிக்கும் கான்கிரீட் அடிவாரத்துக்கும் இடையிலான தூரத்தை அவர் அளவிட்டதாகத் தெரிகிறது.

பின்னர், அங்குள்ள தரைவீடுகளுக்குப் பக்கத்திலுள்ள ஒரு நடைபாதை வழியாக அந்த அதிகாரிகள் சற்று தூரம் நடந்து சென்றனர்.

ஏறக்குறைய 10 நிமிடங்கள் கழித்து அந்த அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர்.

இதற்கிடையே, அந்த இரட்டைச் சகோதரர்களின் சடலங்கள் நேற்று திங்கட்கிழமை இரவு மண்டாய் தகனச்சாலையில் தகனம் செய்யப்பட்டன.

சேவியர் யாப் ஜுங் ஹொவ்ன், 48, எனும் அந்த இரட்டையரின் தந்தைமீது நேற்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!