இணையக் கேளிக்கை விளையாட்டுகளுக்கு அடிமையாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அண்மைய ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தொற்றுச் சூழலில் இந்தப் போக்கு மோசமடைந்திருப்பதாகவும் அமைச்சு கூறியது.
அத்தகைய விளையாட்டுகளுக்கு அடிமையாகி ஆலோசனை தேடிவரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் 60 விழுக்காடு வரை உயர்ந்திருக்கக்கூடும் என்று ஆலோசகர்கள் கூறினர்.
சென்ற ஆண்டு உதவி நாடி தனக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாக இளையர்களுக்கு ஆலோசனை சேவை வழங்கும் ஒரு அமைப்பு சொன்னது.
கொவிட்-19 சூழலுக்கு முன், இந்த எண்ணிக்கை 500-ஆக இருந்தது.
தொற்றுச் சூழலால் சிறுவர்கள் வீட்டிலையே இருக்கின்றனர். அதனால், இணைய விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிடுகின்றனர்.
களைப்பைப் போக்கவும், உற்சாகம் அடையவும் இதைப் பயன்படுத்துகின்றனர் என்று மன நல ஆலோசகர் ஒருவர் குறிப்பிட்டார்.
விளையாட்டுகளில் மிகுதியாக நேரம் செலவிடும்போது, அவர்களுடைய படிப்பு, அன்றாட பணிகள், குடும்ப உறவுகள் போன்றவை பாதிக்கப்படுகின்றன.
இந்தக் கவலைக்குரிய போக்கைக் களைய பெற்றோர்கள் முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
எடுத்துக்காட்டாக, தொலைபேசி, கணினி போன்ற கருவிகளில் பிள்ளைகள் செலவிடும் நேரத்தைப் பெற்றோர் கண்காணிக்கலாம்.
பிள்ளைகளுக்கு புதிய பொழுதுப்போக்கு நடவடிக்கைகளை அறிமுகம் படுத்தலாம் என்றும் கூறப்பட்டது.