சிறுவர்களுக்கு வினையாகும் இணையக் கேளிக்கை விளையாட்டுகள்

இணையக் கேளிக்கை விளையாட்டுகளுக்கு அடிமையாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அண்மைய ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுச் சூழலில் இந்தப் போக்கு மோசமடைந்திருப்பதாகவும் அமைச்சு கூறியது.

அத்தகைய விளையாட்டுகளுக்கு அடிமையாகி ஆலோசனை தேடிவரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் 60 விழுக்காடு வரை உயர்ந்திருக்கக்கூடும் என்று ஆலோசகர்கள் கூறினர்.

சென்ற ஆண்டு உதவி நாடி தனக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாக இளையர்களுக்கு ஆலோசனை சேவை வழங்கும் ஒரு அமைப்பு சொன்னது.

கொவிட்-19 சூழலுக்கு முன், இந்த எண்ணிக்கை 500-ஆக இருந்தது.

தொற்றுச் சூழலால் சிறுவர்கள் வீட்டிலையே இருக்கின்றனர். அதனால், இணைய விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிடுகின்றனர்.

களைப்பைப் போக்கவும், உற்சாகம் அடையவும் இதைப் பயன்படுத்துகின்றனர் என்று மன நல ஆலோசகர் ஒருவர் குறிப்பிட்டார்.

விளையாட்டுகளில் மிகுதியாக நேரம் செலவிடும்போது, அவர்களுடைய படிப்பு, அன்றாட பணிகள், குடும்ப உறவுகள் போன்றவை பாதிக்கப்படுகின்றன.

இந்தக் கவலைக்குரிய போக்கைக் களைய பெற்றோர்கள் முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

எடுத்துக்காட்டாக, தொலைபேசி, கணினி போன்ற கருவிகளில் பிள்ளைகள் செலவிடும் நேரத்தைப் பெற்றோர் கண்காணிக்கலாம்.

பிள்ளைகளுக்கு புதிய பொழுதுப்போக்கு நடவடிக்கைகளை அறிமுகம் படுத்தலாம் என்றும் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!