2028க்குள் தாமான் ஜூரோங்கில் புதிய பலதுறை மருந்தகம் 

வரும் 2028ஆம் ஆண்டுக்குள் தாமான் ஜூரோங் வட்டாரத்தில் புதிய பலதுறை மருந்தகம் திறக்கப்படும்.

ஜூரோங் வட்டாரவாசிகளுக்கு சேவையாற்றும் மூன்றாவது பலதுறை மருந்தகமாக அது இருக்கும்.

மூத்த சுகாதார துணை அமைச்சர் டாக்டர் மருத்துவர் ஜனில் புதுச்சேரி புதன்கிழமை (மார்ச் 9) அன்று இதை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

தற்போதுள்ள ஜூரோங், பைனியர் பலதுறை மருந்தகங்களோடு இந்தப் புதிய மருந்தகமும் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.

அத்துடன், இன்னும் பத்து ஆண்டுகளில் குவின்ஸ்டவுன் பலதுறை மருந்தகம் மேம்படுத்தப்பட்டு, வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளது.

தாமான் ஜூரோங்கிலும் குவின்ஸ்டவுனிலும் திறக்கப்படும் புதிய பலதுறை மருந்தகங்கள் , முதியோருக்கு உதவும் அம்சங்களைக் கொண்டிருக்கும்.

இவ்விரண்டு புதிய பலதுறை மருந்தகங்களும் தொற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கும்.

இதுமட்டுமல்லாமல், மேலும் பல புதிய பலதுறை மருந்தகங்கள் கட்டப்பட உள்ளன.

தற்போது சிங்கப்பூரில் 23 பலதுறை மருந்தகங்கள் மட்டுமே உள்ளன.

2030ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் 32 பலதுறை மருந்தகங்கள் இருக்கும்.

கூடுதல் விவரங்கள், தமிழ் முரசின் மார்ச் 10 அச்சுப்பிரதியில் இடம்பெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!