வரும் 2028ஆம் ஆண்டுக்குள் தாமான் ஜூரோங் வட்டாரத்தில் புதிய பலதுறை மருந்தகம் திறக்கப்படும்.
ஜூரோங் வட்டாரவாசிகளுக்கு சேவையாற்றும் மூன்றாவது பலதுறை மருந்தகமாக அது இருக்கும்.
மூத்த சுகாதார துணை அமைச்சர் டாக்டர் மருத்துவர் ஜனில் புதுச்சேரி புதன்கிழமை (மார்ச் 9) அன்று இதை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
தற்போதுள்ள ஜூரோங், பைனியர் பலதுறை மருந்தகங்களோடு இந்தப் புதிய மருந்தகமும் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
அத்துடன், இன்னும் பத்து ஆண்டுகளில் குவின்ஸ்டவுன் பலதுறை மருந்தகம் மேம்படுத்தப்பட்டு, வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளது.
தாமான் ஜூரோங்கிலும் குவின்ஸ்டவுனிலும் திறக்கப்படும் புதிய பலதுறை மருந்தகங்கள் , முதியோருக்கு உதவும் அம்சங்களைக் கொண்டிருக்கும்.
இவ்விரண்டு புதிய பலதுறை மருந்தகங்களும் தொற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கும்.
இதுமட்டுமல்லாமல், மேலும் பல புதிய பலதுறை மருந்தகங்கள் கட்டப்பட உள்ளன.
தற்போது சிங்கப்பூரில் 23 பலதுறை மருந்தகங்கள் மட்டுமே உள்ளன.
2030ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் 32 பலதுறை மருந்தகங்கள் இருக்கும்.
கூடுதல் விவரங்கள், தமிழ் முரசின் மார்ச் 10 அச்சுப்பிரதியில் இடம்பெறும்.