மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இனி சிங்கப்பூரின் மற்ற மருத்துவமனைகளிலும் உதவி நாடலாம்.
சுகாதார அமைச்சுக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி புதன்கிழமை (மார்ச் 9) அன்று நாடாளுமன்றத்தில் இதை அறிவித்தார்.
'நாம்ஸ்' எனப்படும் பழக்கங்களுக்கு அடிமையாகுதலுக்கான தேசிய நிர்வாக சேவை மனநல மருத்துவமனையில் தற்போது வழங்கப்படுகிறது.
இந்தச் சேவை மற்ற மருத்துவமனைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான ஒதுக்கீடு வரவு செலவு திட்டத்தை பற்றிய விவாதத்தின்போது அவர் பேசினார்.
சாங்கி பொது மருத்துவமனை, தேசிய பல்கலைகழக மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் நாம்ஸ் மனநலச் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.
இந்தச் சேவை மையங்களில் வெவ்வேறு பலதுறைகளில் தேர்ச்சிபெற்ற குழுக்கள் இருக்கும்.
இக்குழுக்கள் பழக்கங்களுக்கு அடிமையாவோருக்கு உள்நோயாளி, வெளிநோயாளி சேவைகளை வழங்கும்.
இச்சேவைகளை குறித்த கூடுதலான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.