சிங்கப்பூரில் புதன்கிழமை (மார்ச் 9) நிலவரப்படி புதிதாக 17,051 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒப்புநோக்க, கடந்த செவ்வாய்க்கிழமை 22,201 பேருக்குத் தொற்று உறுதியானது.
நேற்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தோர் எண்ணிக்கை 1,513ஆக சற்று உயர்ந்தது. செவ்வாய்க்கிழமை இது 1,499ஆக இருந்தது.
வாராந்திர கொவிட்-19 தொற்று அதிகரிப்பு விகிதம் தொடர்ந்து 1க்குக்கீழ் உள்ளது. நேற்று முன்தினம் அது 0.94ஆக இருந்தது.
மார்ச் 2ஆம் தேதியிலிருந்து, தொடர்ந்து எட்டாவது நாளாக இந்த விகிதம் 1க்குக்கீழ் உள்ளது.
நேற்று மேலும் 11 கொவிட்-19 மரணங்கள் பதிவாகின.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 50 பேர் இருந்தனர். 187 பேருக்கு உயிர்வாயு தேவைப்பட்டது.
சிங்கப்பூரில் ஓமிக்ரான் அலை உச்சம் தொட்டு அது தணிந்து வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று கூறியிருந்தார்.