தனது முன்னாள் காதலனைக் கத்தியால் குத்திய குற்றத்திற்காக ஜெயா ஜெயராமன் என்பவருக்கு ஏழு மாதம் நான்கு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்றாண்டு மார்ச் மாதம் முன்னாள் காதலனுடன் வாக்குவாதம் ஏற்பட்டபோது அவரை ஜெயா, 38, கத்தியால் குத்தியுள்ளார்.
வேண்டுமென்றே கத்தியைக் கொண்டு ஒருவருக்குக் காயம் ஏற்படுத்தியது, பொது இடத்தில் தொந்தரவு கொடுத்தது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை ஜெயா ஒப்புகொண்டார்.
இதோடு, அவர் தனது செல்லப் பிராணியான நாய் ஒன்றை புறக்கணித்ததாகவும் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இரண்டு மாதங்களாக நாயை வீட்டில் தனியாக விட்டுச்சென்றதால், அது போதிய உணவு, நீர் இல்லாததால் மடிந்தது.
விலங்கு மற்றும் பறவை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜெயாவுக்கு $5,800 அபராதமும் செல்லப் பிராணிகளை வைத்திருக்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது.