தமிழ்நாடு

ராமநாதபுரம்: தங்கள் ஊரைச் சேர்ந்தவரைத் தாக்கியவர்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, ஒட்டுமொத்த கிராமத்தினரும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளனர்.
திருச்சி: அனுமதி பெறாமல் புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சிற்றூரில் பரப்புரை செய்ததாக திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ்மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
மதுரை: தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம், பரிசு என ஏதேனும் ஒருவகையில் லஞ்சம் கொடுப்பது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பையே தகர்த்துவிடும் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனைத் தகுதிநீக்கம் செய்யக் கோரித் தொடரப்பட்ட மனுமீது வியாழக்கிழமை (ஏப்ரல் 18) விசாரணை நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுராந்தகம்: ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் வகையில் இரண்டு தொகுதிகளில் திமுகவும் பாஜகவும் ‘டம்மி’ வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.