துப்பாக்கிச்சூடு

பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 14ஆம் தேதியன்று அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் மெய்க்காப்பாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாலை தமது மனைவியைத் துப்பாக்கியால் சுட முயன்ற 38 வயது ஹஃபிசுல் ஹராவி கிட்டத்தட்ட 38 மணி நேரம் கழித்து கைது செய்யப்பட்டார்.
பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஏப்ரல் 14ஆம் தேதியன்று துப்பாக்கிச்சூடு நடத்தியவர் எனச் சந்தேகிக்கப்படும் 38 வயது ஹஃபிசுல் ஹராவியை ஏழு நாள்களுக்கு விசாரணைக் காவலில் வைத்திருக்க கிளந்தான் மாநில கோத்தா பாரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோலாலம்பூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 14) துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரின் மனைவிக்குப் பாதுகாப்பு ஆணை பிறப்பிக்கப்படவில்லை.
செப்பாங்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய முனையம் 1ல் தமது மனைவியைக் குறிவைத்து ஆடவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். ஆனால் அந்தப் பெண்ணின் மெய்க்காப்பாளரது வயிற்றில் குண்டு பாய்ந்தது.