நீதிபதி

கள்ளக்குறிச்சி: தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி நீதிபதிகள் பாதபூஜை செய்த செயல் சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துாய்மைப் பணித் திட்ட சிறப்பு முகாமை உளுந்துார்பேட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம், துவக்கி வைத்து தூய்மை பணியாளர்களைப் பாராட்டிப் பேசினார்.

அப்போது, மூத்த துாய்மை பணியாளர்களான உமாவதி, ராஜாமணி ஆகியோரை உட்கார வைத்து, அவர்களுக்குப் பாத பூஜை செய்து, வணங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
டென்வர்: சட்ட வழக்கு ஒன்றில் US$23,500 (S$32,135) மதிப்பில் கட்டுக்கட்டாக சில்லறைக் காசை செலுத்த பிரதிவாதி ஒருவர் முற்பட்டார். ஆனால், அது சரியான கட்டண முறையன்று எனக் கூறி அமெரிக்காவில் கொலொராடோ நீதிபதி கடந்த வாரம் தீர்ப்பளித்தார். அந்தக் காசுகளின் மொத்த எடை 2,900 கிலோகிராமுக்கு மேல் இருக்கும்.
சிங்கப்பூரின் ஆகப்பெரிய சட்டவிரோதப் பண விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் 10 பேரில் ஒருவரான வாங் ஷுய்மிங்கிற்கு பிணை வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
போதைப்பொருள் தொடர்பில் குற்றம் புரிந்த ஒருவரை, தன்னுடன் பணிபுரியும் சக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) அதிகாரி தாக்கவில்லை என்று பெண் காவல் அதிகாரி ஒருவரிடமும் மாவட்ட நீதிபதியிடமும் சிஎன்பி அதிகாரி முகம்மது ஹைக்கல் ரஹ்மான் பொய்யுரைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சென்னை: தமிழக அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திடீரென உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார்.