விமானம்

மும்பை: விமானத்திலுள்ள இருக்கைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக முன்பதிவு செய்யப்பட்டதால், பயணி ஒருவர் நின்றவாறே பயணம் செய்ய ஆயத்தமானார்.
புனே: பெங்களூரு விமான நிலையத்திலிருந்து கிளம்பிய பத்து நிமிடங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான இயந்திரத்தில் தீப்பிடித்ததை அடுத்து, அவ்விமானம் மீண்டும் பெங்களூருக்கே திரும்பியது.
சிட்னி: பசிபிக் பெருங்கடலில் உள்ள நியூ கலிடோனியா தீவில் குறைந்தது அறுவரை பலிவாங்கிய கலவரம் மூண்டதைத் தொடர்ந்து பிரான்சைச் சேர்ந்த சுமார் 1,000 காவல்துறை அதிகாரிகள் அவ்வட்டாரத்தைச் சென்றடைந்துள்ளனர்.
சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப் படையின் எஃப்-16 ரக விமானம் விபத்துக்கு உள்ளானதற்கான காரணம் கண்டறியப்பட்டுவிட்டது என்றும் விரைவில் அந்த ரக விமானங்கள் சேவைக்குத் திரும்பும் என்றும் தற்காப்பு அமைச்சு தெரிவித்து உள்ளது.
ஜகார்த்தா: இந்தோனீசியாவிலிருந்து 468 பேருடன் சவூதி அரேபியாவுக்குப் புறப்பட்ட கருடா இந்தோனீசியா விமானத்தின் இயந்திரம் தீப்பிடித்துக்கொண்டதால் புதன்கிழமை (மே 15) அது அவசரமாகத் தரையிறங்கியது.