இந்தியா

புதுடில்லி: இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இதையடுத்து, அத்தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கும் நிலையில், முதல்கட்ட ஓட்டுப்பதிவு கடந்த 19ம் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதில் தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 65.50 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. பல்வேறு மாநிலங்களில் வெயில் காரணமாக ஓட்டு விழுக்காடு குறைந்ததாகக் கூறப்பட்டது.


கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகள் உட்பட, கர்நாடகாவில் 14; ராஜஸ்தானில் 13; மஹாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் எட்டு; மத்திய பிரதேசத்தில் ஏழு; அசாம் மற்றும் பீஹாரில் ஐந்து; சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் மூன்று; மணிப்பூர், திரிபுரா, ஜம்மு - காஷ்மீரில் தலா ஒரு தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இதற்காக அந்தந்த மாவட்டங்களிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் மற்றும் மூலப் பொருள்களைப் பிரித்து அனுப்பும் பணிகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். வாகனங்கள் செல்ல முடியாத வடகிழக்கு பகுதிகளுக்கும் பிற இடங்களுக்கும் ஹெலிகாப்டர் மூலம் வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறது.
புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இதுவரை நடைபெற்ற 16 மக்களவைத் தேர்தல்களில் 13 முறை காங்கிரஸ் கட்சி அங்கு வெற்றி பெற்றுள்ளது. மூன்று முறை மட்டுமே பிற கட்சிகள் வென்றுள்ளன.
பாட்னா: இந்தியாவில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த இளையர் பிரிவுத் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சென்னை: பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயி‌ஷா ரா‌ஷான் எனும் 19 வயது பெண் மாற்று இதயத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார்.
புதுடெல்லி: சட்ட விரோதமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் போக்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.