உள்துறை அமைச்சு

உள்துறைக் குழு அதிகாரிகள் 2025ஆம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு அவதாரங்களுடன் (அவதார்) பாவனைப் பயிற்சிகளைப் பெறலாம்.
உள்துறை அமைச்சு இவ்வாண்டு அறிமுகப்படுத்த இருக்கும் இன நல்லிணக்கச் சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகள் நாடப்படுகின்றன.
பொருளியல் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் வேளையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புரியப்படும் குற்றங்கள், பாதுகாப்பு மிரட்டல்கள் ஆகியவை அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
குற்றக் கும்பல்கள் அல்லது ரகசியச் சங்கங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படுபவரை விசாரணையின்றித் தடுத்துவைக்கவோ காவல்துறைக் கண்காணிப்பின்கீழ் வைக்கவோ உத்தரவிடும் உள்துறை அமைச்சரின் அதிகாரத்தை நீட்டிப்பது தொடர்பான மசோதா முதல் வாசிப்பிற்காக மார்ச் 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரின் வெவ்வேறு சட்ட அமலாக்க அமைப்புகளின் அதிகாரிகள் ஒரே இடத்தில் வேலைசெய்யும் விதமாக, புதிய செயலாக்க நிலையத்தை உள்துறை அமைச்சு கட்டிவருகிறது.