சண்டையைப் படம்பிடித்த மாணவர் மரணம்

பாட்னா: இரு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையைப் படம்பிடித்த கல்லூரி மாணவர்மீது குண்டு பாய்ந்து, அவர் உயிரிழந்தார்.

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இச்சம்பவம் வியாழக்கிழமை நிகழ்ந்தது.

பாகல்பூரைச் சேர்ந்த ஆஷிஷ் குமார் என்ற அம்மாணவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.எட். படித்து வந்தார்.

தங்கள் வீட்டிற்கு முன்பாக இருதரப்பு உள்ளூர் அரசியல்வாதிகள் மோதிக்கொண்டதாக ஆஷிஷின் சகோதரர் சச்சின் கூறினார். இதனையடுத்து, சகோதரர்கள் இருவரும் மொட்டை மாடிக்குச் சென்று, நடப்பதைக் கண்டனர். 

அப்போது, எவரோ துப்பாக்கி விசையை அழுத்த, அதிலிருந்து பாய்ந்த குண்டு ஆஷிஷின் நெஞ்சைத் துளைத்தது. உடனடியாக  அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

இந்த மொத்த நிகழ்வும் ஆஷிஷின் கைப்பேசியில் படமாகப் பதிவாகியுள்ளது.

ஆஷிஷின் மரணத்தைத் தொடர்ந்து, விசாரணையைத் தொடங்கிய காவல்துறை, தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தேடிவருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!