சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசிகளைக் கட்டாயமாக்குவது, கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டிய விவகாரம் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி இன்று திங்கட்கிழமை (நவம்பர் 1) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியை அப்படி கட்டாயப்படுத்தினாலும், அதைச் செயல்படுத்துவதும் சிரமம் என்றார் அவர்.
தடுப்பூசிகளைக் கட்டாயமாக்குவதில் தடுப்பூசி விகிதம், அனைத்துலக நடைமுறை, தடுப்பூசியின் செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கருத்தில்கொள்ளலாம் என்று அவர் விவரித்தார்.
இருப்பினும், தடுப்பூசியைக் கட்டாயமாக்கினால் அதைக் கண்காணிப்பதும் செயல்படுத்துவதும் சவாலாக இருக்கும் என்று டாக்டர் ஜனில் கூறினார்.
“அது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று என நான் நினைக்கிறேன். எனினும், அதன் தொடர்பில் பல சிக்கல்கள் உள்ளன,” என்றார் அவர்.