உலு பாண்டான் கால்வாயில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்ததை அடுத்து, கிம் மோவில் உள்ள உலு பாண்டான் இணைப்புப் பாதையின் பகுதி ஞாயிற்றுக்கிழமை காலை மூடப்பட்டிருந்தது.
அங்கு திடீர் வெள்ளம் ஏற்டலாம் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் காலை 9.50 மணிக்கு எச்சரிக்கை விடுத்தது.
கால்வாயில் நீர்மட்டம் 90 விழுக்காடு நிறைந்துவிட்டதாக கழகம் கூறியது.
தேசியப் பூங்காக் கழகம், தானும் பொதுப் பயனீட்டுக் கழகமும் நீர்மட்டத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் தேவைப்பட்டால் பூங்கா இணைப்புப் பாதையை மூடப்போவதாகவும் தனது இணையப்பக்கத்தில் தெரிவித்தது.
கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
அப்போது கால்வாய்க்குள் மண் நிறைந்ததை அடுத்து, அங்கு தண்ணீர் தேங்காமல் இருக்க நீர்வழிப் பாதை அமைக்கப்பட்டது.
நிலச்சரிவால் ஏற்பட்ட சேதத்தைத் சரிசெய்யும் கட்டுமானப் பணிகள் முடிய சில மாதங்கள் பிடிக்கலாம்.