268 வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி; மனிதவள அமைச்சின் விசாரணையில் அம்பலம்

கட்டுமான நிறுவனம் அமர்த்திய துணை ஒப்பந்த நிறுவனம் ஒன்று, ஐந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை வைத்திருந்தது.

இந்நிலையில், மனிதவள அமைச்சு இதுகுறித்து நடத்திய விசாரணையில் புதிய தகவல் அம்பலமானது.

அந்தப் பிரதான கட்டுமான நிறுவனமே அதன் 268 சொந்த ஊழியர்களுக்கு சம்பள பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

ஷாங்காய் சோங் கீ எனும் அந்நிறுவனம் 268 ஊழியர்களுக்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை வழங்கியுள்ளது. எஞ்சிய சம்பளத்தை தவணை முறையில் வழங்க ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது என்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.

துணை ஒப்பந்த நிறுவனமான ஸெங்டா கார்ப்பரேஷனின் பத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் அங் மோ கியோ ஸ்திரீட் 62ல் உள்ள ‘என்சிஎஸ் ஹப்’ வளாகத்தின் நுழைவு, வெளியேறும் வாயில்களை வழிமறித்து, அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த வளாகத்தின் வரவேற்பு பகுதியை புதுப்பிக்கும் பணியை ஏற்று இருந்த ஷாங்காய் சோங் கீ, ஆறு வெளிநாட்டு ஊழியர்களை வழங்க ஸெங்டா கார்ப்பரேஷனை அமர்த்தியது.

மனிதவள அமைச்சின் முதற்கட்ட விசாரணையில் அந்தப் பத்தில் ஐந்து பேருக்கு ஸெங்டா கார்ப்பரேஷன் சம்பள பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இந்தச் சம்பவம் இன்னமும் காவல்துறை விசாரணையில் இருக்கிறது என்று திரு ஸாக்கி முகம்மது கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!