திபெத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் விடுமுறையைக் கழிக்கச் சென்ற சீன ஆடவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
தமது அறையில் உள்ள படுக்கைக்கு கீழ் சடலம் இருந்தது தெரியாமல் ஆடவர் அங்கு தூங்கியிருக்கிறார்.
சம்பவம் லசா என்னும் ஹோட்டலில் ஏப்ரல் 21ஆம் தேதி நடந்தது.
அறைக்கு வந்த ஆடவர் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அந்த அறையில் தூங்கியுள்ளார், அறையில் துர்நாற்றம் வீசியதால் அவர் வேறு அறைக்குச் சென்றார்.
அதன் பின்னர் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
தமது படுக்கைக்கு கீழ் சடலம் இருந்த செய்தியைக் கேட்டு ஆடவர் அதிர்ச்சியடைந்தார்.
சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடவர் மறுநாள் வேறு ஒரு ஹோட்டலுக்குச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டன.
சம்பவம் குறித்து ஆடவர் சமூக ஊடகங்களிலும் பதிவு ஒன்றும் வெளியிட்டுள்ளார்.