வழக்கநிலைக்குத் திரும்பிய மணிலா விமானநிலையம்

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள நின்னோய் அக்யூனோ அனைத்துலக விமான நிலையம் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளது.

விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் ஏற்பட்ட மின்தடையால் 48 உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் நீடித்த மின்தடை தற்போது சரிசெய்யப்பட்டு சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மின்தடையின்போது அவசர உதவிக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. அதன்மூலம் குடிநுழைவு, விமான நிறுவனங்களின் கணினிகள் போன்ற முக்கிய சேவைகள் தடையில்லாமல் இயங்கின. 

பாதிக்கப்பட்ட உள்நாட்டு விமானச் சேவைகள் அனைத்தும்  சீபு பசிபிக் நிறுவனத்தைச் சேர்ந்தவை. வாடிக்கையாளர்கள் பயணச்சீட்டை வேறு ஒரு நாளுக்கு மாற்றிக்கொள்ளலாம் அல்லது பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ளலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்தது. 

மூன்று நாள் வாரயிறுதி விடுமுறையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் நேரத்தில் மின்தடை ஏற்பட்டது.

விமான நிலையத்தில்  நான்கு மாதங்களுக்கு முன்னர் இதே போன்று மின்தடை ஏற்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!