கொவிட்-19க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டோருடன் ஒப்புநோக்க அதைப் போட்டுக்கொள்ளாதோரை மீண்டும் நோய் தொற்றும் சாத்தியம் இருமடங்கு அதிகம் என அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கெண்டக்கி மாநிலத்தில் 246 பெரியவர்களை கடந்த ஆண்டு கிருமி தொற்றியதைத் தொடர்ந்து இவ்வாண்டு மே, ஜூன் மாதங்களில் அவர்களை மீண்டும் கிருமி தொற்றியது. அவர்களை வைத்து இந்தப் புதிய ஆய்வு நடத்தப்பட்டது.
ஃபைசர், மொடர்னா, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டோருடன் ஒப்பிடுகையில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரை நோய் தொற்றும் சாத்தியம் 2.34 மடங்கு அதிகம் இருப்பதாக ஆய்வு கண்டறிந்தது.