அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று காவல்துறை அதிகாரிகள் மாண்டனர்.
இந்தத் தாக்குதலில் மேலும் ஐவர் காயமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் நான்கு காவல்துறை அதிகாரிகளும் அவசரகால நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் அடங்குவர்.
காவல்துறையைச் சேர்ந்த நாய் ஒன்றும் சம்பவத்தில் மாண்டது.
காவல்துறை அதிகாரிகளைச் சுட்டுக்கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் 49 வயது ஆடவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க நேரப்படி கடந்த வியாழக்கிழமை (30 ஜூன்) மாலை 6.44 மணியளவில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.