ரஷ்யாவின் முக்கியமான கிரீமியா கடற்படை தலைமையகத்தில் உக்ரேன் ஆளில்லா விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் குறைந்தது 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உக்ரேன்-ரஷ்யா போரில் 150 நாள்களைக் கடந்துவிட்ட வேளையில் இந்தப் போரில் ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை முக்கிய பங்கு வகித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை இந்த கடற்படை தலைமையகம் மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டது. தலைமையகம் மீது குண்டு வீசப்பட்டதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யாவில் நேற்று கடற்படை தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.